மதுரை ஆரப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை (ஜூலை 19) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்திக் கழகம் அரசரடி செயற்பொறியாளர் பி.குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அரசரடி உபமின் நிலையத்தில் புதன்கிழமை (ஜூலை 19) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. இதன் காரணமாக மின்தடை ஏற்படும் பகுதிகள் விவரம்: சம்மட்டிபுரம் பிரதான சாலை, காளவாசல் பகுதிகள், முத்துராமலிங்கத் தேவர் தெரு, ஸ்ரீ ராம்நகர், எச்எம்எஸ் காலனி, டோக்நகர் 4 முதல் 16 தெருக்கள் வரை, விராட்டிப்பத்து சில பகுதிகள், மாப்பிள்ளை விநாயகர் தியேட்டர், பல்லவன்நகர்.
முடக்குச்சாலை, வ.உ.சி. பிரதான சாலை, இ.பி.காலனி, பழங்காநத்தம்- வசந்தநகர் சந்திப்பு, அசோக்நகர், டோக் நகர் 1 முதல் 3 தெருக்கள், கோச்சடை, பழைய விளாங்குடி, புதிய விளாங்குடி. புதுசிறைச்சாலை பகுதி, மேலப்பொன்னகரம் 2, 3 மற்றும் 10 ஆம் தெருக்கள், மேலமாரட் வீதி, ஆர்.வி.நகர், ஞானஒளிவுபுரம், விசுவாசபுரி 1 முதல் 5 ஆம் தெருக்கள் வரை, ஆரப்பாளையம் பேருந்து நிலையம், இஎஸ்ஐ மருத்துவமனை, கைலாசபுரம், எஸ்.எஸ். காலனி, வடக்குவாசல், அருணாச்சலம் தெரு, கம்பர் தெரு.
ஜவஹர் 1 முதல் 5 ஆம் தெருக்கள் வரை, சொக்கலிங்கநகர் 1 முதல் 8 ஆம் தெரு வரை, பொன்மேனி, சம்மட்டிபுரம், பாண்டியன்நகர், பைபாஸ் சாலைப் பகுதிகள், பெத்தானியபுரம், பாத்திமா நகர், வருமானவரித்துறை காலனி, டெம்சிகாலனி, பாத்திமா கல்லூரி, இந்திரா நகர், குட்ஷெட் தெரு, மீனாட்சிபஜார், தெற்கு மண்டல அலுவலகப் பகுதிகள்.
கப்பலூர் பகுதிகள்: புதன்கிழமை (ஜூலை 19) கப்பலூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் கப்பலூர், தியாகராஜர் மில், உச்சபட்டி, தனக்கன்குளம், கூத்தியார்குண்டு, தோப்பூர், முல்லை நகர், ஆஸ்டின்பட்டி, செட்டிகுளம், கரடிக்கல் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என திருமங்கலம் செயற்பொறியாளர் சு.மகாராஜன் தெரிவித்துள்ளார்.