திருமங்கலம் கரடிக்கல்லில் ஏப்ரல் 2 ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இங்குள்ள சுந்தராஜப்பெருமாள் கோயில் திருவிழாவையொட்டி ஆண்டுதோறும் ஜல்லிகட்டு நடத்துவது வழக்கம். இந்நிலையில் கடந்த 12 ஆண்டுகளாக இங்கு ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த அரசு அனுமதி வழங்கியுள்ளதால், ஏப்ரல் 2 ஆம் தேதி ஜல்லிக்கட்டை நடத்த விழா குழுவினர் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இதற்காக வாடிவாசல் மற்றும் இருக்கைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.