மானாமதுரை- ராமேசுவரம் இடையே தாற்காலிகமாக ரத்து செய்யப்பட்ட ரயில்கள் வழக்கம்போல இயங்கும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட செய்தி:
மானாமதுரை- ராமேசுவரம் இடையே நடைபெற்ற பணிகள் காரணமாக நவம்பர் 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் அவ்வழியே செல்லும் ரயில்கள் தாற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில் அந்தப் பணிகள் முன்கூட்டியே முடிந்து விட்டதால் ரயில்கள் வழக்கம் போல் இயங்கும்.
ரயில்கள் விபரம்: வண்டி எண்.56829/56830, திருச்சி- ராமேசுவரம் பயணிகள் ரயில், வண்டி எண்.56722, ராமேசுவரம்- மதுரை பயணிகள் ரயில், வண்டி எண்.56721, மதுரை- ராமேசுவரம் பயணிகள் ரயில் வழக்கம் போல இயங்கும் என அறிவிக்கப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.