சிவகங்கையில் நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, வெள்ளிக்கிழமை (நவ.17)மதுரை வருகிறார்.
சென்னையில் இருந்து விமானத்தில் வெள்ளிக்கிழமை இரவு 7.40-க்கு வரும் அவர், அவனியாபுரம், வில்லாபுரம், தெற்குவாசல், வடக்கு வெளிவீதி, சிம்மக்கல், கோரிப்பாளையம் வழியாக அழகர்கோவில் சாலையில் உள்ள அரசினர் சுற்றுலா மாளிகைக்குச்சென்று இரவு தங்குகிறார்.
பின்னர் சனிக்கிழமை காலை 6 மணிக்கு, மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்கிறார்.மீண்டும் சுற்றுலா மாளிகை திரும்பும் முதல்வர்,
தமிழக அமைச்சர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்களைச் சந்திக்கிறார்.
பின்னர் பகல் 12 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு கே.கே.நகரில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலையணிவிக்கிறார். அங்கிருந்து ஆவின் சந்திப்பு, மேலமடை, கருப்பாயூரணி வழியாக சிவகங்கை செல்கிறார்.