உசிலம்பட்டியில் வியாழக்கிழமை மாலை பெய்த மழையால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
உசிலம்பட்டியில் வியாழக்கிழமை காலை முதல் வெயில் வாட்டி வந்தது.
ஆனால் மாலை 4 மணிக்கு கருமேகம் சூழ்ந்து இருண்டு காணப்பட்டது. பின்னர் உசிலம்பட்டி நகர் பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மழை கொட்டியது. இதனால் மழை நீர் அனைத்து பகுதிகளிலும் ஆறாக ஓடியது.
சில இடங்களில் சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கியது. முக்கிய சாலையான மதுரை பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.