கொட்டாம்பட்டியில் மெருகூட்டுவதாகக் கூறி 2 பவுன் நகையைத் திருடியதாக பிகார் மாநில இளைஞரை கொட்டாம்பட்டி போலீஸார் வியாழக்கிழமை கைதுசெய்தனர்.
கொட்டாம்பட்டியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவரது மகள் அங்கயற்கன்னி. இவரிடம் 2 பவுன் நகையை மெருகூட்டித் தருவதாகக் கூறி மோசடி செய்துவிட்டதாக வெள்ளைச்சாமி போலீஸாரிடம் புகார் தெரிவித்தார். இதன்பேரில், பிகாரைச் சேர்ந்த தில்பூஷத்குமார் (21) என்பவரை கொட்டாம்பட்டி போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.