அழகர்கோவில் அருகே ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனத்தின் மீது மினி லாரி மோதியதில், பிளஸ் 2 மாணவர் உயிரிழந்தார்.
மதுரை மேல அனுப்பானடியைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் யோகேஷ் (17) மற்றும் எல்லீஸ் நகரைச் சேர்ந்த வீரக்குமார் மகன் செந்தில்குமார் (13). இவர்கள் இருவரும் அ.வல்லாளபட்டியில் சண்டை சேவல் வாங்குவதற்காக வந்துவிட்டு, மீண்டும் மதுரைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, வல்லாளபட்டி அருகே மினி லாரி மோதியதில், யோகேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த செந்தில்குமார், மதுரையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலவளவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.