மதுரை
மேலூர் அருகே கோயில் காளை சாவு
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கிராமக் கோயில் காளை உடல்நலக் குறைவு காரணமாக ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கிராமக் கோயில் காளை உடல்நலக் குறைவு காரணமாக ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது.
அட்டப்பட்டி அருகே பூதமங்கலத்தில் செட்டிச்சி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் காளை கடந்த சில தினங்களாக உடல் நலம் குன்றியிருந்ததால், சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி ஞாயிற்றுக்கிழமை காலை இறந்தது.
அதையடுத்து, கிராம மக்கள் இறந்த காளைக்கு வேட்டி, துண்டு, மாலைகள்அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.