கைவிலங்குடன் தப்பியோடிய கைதியை போலீஸார் தேடி வருகின்றனர்.
மதுரை தெற்குவாசல் பகுதியைச் சேர்ந்தவர் அப்பாஸ். செல்லிடப்பேசியைப் பறித்துச் சென்ற வழக்கில் இவரை தெற்குவாசல் போலீஸார் சனிக்கிழமை கைது செய்து விசாரணை நடத்திக்கொண்டிருந்தனர்.
அப்போது கைவிலங்குடன் இருந்த அவர் சார்பு ஆய்வாளர் பூபதி, ஏட்டு தர்மராஜ் ஆகியோரைத் தள்ளி விட்டு தப்பி ஓடிவிட்டார்.
அவரைத் தெற்குவாசல் குற்றப்பிரிவு போலீஸார் தேடி வருகின்றனர்.