கூட்டுறவுத் தேர்தல் தொடர்பான பயிற்சி வகுப்பு மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாநில கூட்டுறவு தேர்தல் ஆணையர் மு.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இப் பயிற்சியில் மாவட்டம் முழுவதும் உள்ள தேர்தல் அலுவலர்கள் கலந்து கொண்டனர். மாவட்டத்தில் உள்ள தொடக்க கூட்டுறவு சங்கங்களுக்கு முதல் கட்டத்திலும், விற்பனை சங்கங்கள் மற்றும் சர்க்கரை ஆலை சங்கம் ஆகியவற்றுக்கு இரண்டாவது கட்டத்திலும், மாவட்ட கூட்டுறவு ஒன்றியம், தொழிற்
கூட்டுறவு வங்கி ஆகிய கூட்டுறவு சங்கங்களுக்கு 4-ஆவது கட்டத்திலும், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்துக்கு 5-ஆவது
கட்டத்திலும் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மார்ச் 12 முதல் ஏப்ரல் 28 வரையிலான முதல் கட்டத் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையர் ஆய்வு செய்தார். தேர்தல் அலுவலர்கள் பின்பற்ற வேண்டியவை குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
கூடுதல் பதிவாளர் மற்றும் தேர்தல் ஆணைய செயலர் ஜான் பீட்டர் அந்தோணிசாமி, மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் ரெ.குணாளன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் வி.எம்.சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றனர்.