மதுரை
திருநகரில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
மதுரை திருநகர் பகுதியில் தொடர்மழை காரணமாக அப்பகுதியில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
மதுரை திருநகர் பகுதியில் தொடர்மழை காரணமாக அப்பகுதியில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
கஜா புயல் காரணமாக மதுரை திருநகர், திருப்பரங்குன்றம், அவனியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவு முதல் மாலை வரை மழை பெய்து வந்தது. திருநகர் மீனாட்சி தெருப்பகுதியில் உள்ள வேப்ப மரம் வேருடன் சாலையில் சாய்ந்தது. இதனால் அப்பகுதி வழியாக சென்ற மின் கம்பிளும் அறுந்து விழுந்தன. மரம் விழுந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.
உடனடியாக மாநகராட்சி உதவிப் பொறியாளர் முருகன் தலைமையிலான மாநகராட்சி பணியாளர்கள் வந்து மரத்தை அகற்றினர். மேலும் மின்வாரியத் துறையினர் கொட்டும் மழையில் மின் இணைப்பை சரிசெய்தனர்.