திருப்பரங்குன்றம் தொகுதி இடைத் தேர்தலை முன்னிட்டு அவனியாபுரத்தை அடுத்த சிந்தாமணியில் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமை வகித்தார். கூட்டத்தில் அதிமுக அணைப்பு செயலர் ம.முத்துராமலிங்கம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் பெரியபுள்ளான், சரவணன், ஒன்றிய செயலர் ராம கிருஷ்ணன், பகுதி செயலர் முனியாண்டி, வார்டு செயலர் கர்ணா, ஏ.கே.பி.சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.