திமுக தலைவர் மு.கருணாநிதி காலமான போது, அவரது மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியில் இறந்த 5 பேரின் குடும்பங்களுக்கு திமுக சார்பில் தலா ரூ.2 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.
திமுக தலைவர் மு.கருணாநிதி ஆகஸ்ட் 7 ஆம் தேதி காலமானார். அவரது மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சியில் இறந்த மதுரை வடக்கு மாசி வீதியைச் சேர்ந்த ஞானசேகரன், கருணாநிதியின் இறுதிச் சடங்கில் பங்கேற்கச் சென்றபோது நெரிசலில் சிக்கி இறந்த துரை உள்பட மதுரை மாவட்டத்தில் 5 பேருக்கு திமுக சார்பில் தலா ரூ.2 லட்சம் நிவாரணத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
அதற்கான வரைவோலையை திமுக மாநகர் மாவட்ட பொறுப்புக்குழுத் தலைவர் கோ.தளபதி, இறந்தவர்களின் குடும்பத்தினரிடம் புதன்கிழமை வழங்கினார். பொறுப்புக் குழு உறுப்பினர்கள் வ.வேலுசாமி, பெ.குழந்தைவேல், ஜெயராமன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.