தூய்மையே சேவை இயக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மதுரையில் தபால் ஊழியர்கள் திங்கள்கிழமை தூய்மைப் பணிகளில் ஈடுபட்டனர்.
மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தூய்மையே சேவை இயக்கத்தின் சார்பில் அஞ்சல்துறை பல்வேறு கோட்டங்களிலும் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக மதுரை தல்லாகுளம் நேரு சிலையில் இருந்து மெயில் மோட்டார் சேவையகம் வரையிலும் உள்ள இடங்களில் தபால் ஊழியர்கள் தூய்மைப் பணிகளை மேற்கொண்டனர்.
மதுரைக் கோட்ட முதுநிலைக் கண்காணிப்பாளர் என்.ஸ்ரீஹர்ஷா, உதவிக் கோட்ட கண்காணிப்பாளர் கே.எஸ்.உமாராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.