விருதுநகர், கல்பட்டிசத்திரம், திண்டுக்கல் ரயில் நிலையங்களில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக அவ்வழியே இயக்கப்படும் ரயில்களின் பயண நேரத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்தி:
விருதுநகர்-நல்லி-கோவில்பட்டி-குமாரபுரம் ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அவ்வழியே இயக்கப்படும் சில ரயில்களின் பயண நேரத்தில் தற்காலிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
திருநெல்வேலி -மயிலாடுதுறை/ ஈரோடு பயணிகள் ரயில்(எண்.56826) ஞாயிறு, திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் (அக்.14, 15, 16) ஆகிய நாள்களில் திருநெல்வேலியில் இருந்து அதிகாலை 5.05 மணிக்கு பதிலாக காலை 6.20 மணிக்கு புறப்படும். திருச்செந்தூர்-பாலக்காடு பயணிகள் ரயில்(எண்.56770) திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் (அக்.13 முதல் 17வரை) விருதுநகர் - திருநெல்வேலி இடையேயும், பாலக்காடு-திருச்செந்தூர் பயணிகள் ரயில்(எண்.56769) புதன்கிழமைகளில் மதுரை - திருநெல்வேலி இடையேயும் தற்காலிகமாக ரத்து செய்யப்படும்.
கல்பட்டிச்சத்திரம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் அக்.15-17 ஆம் தேதி வரை திண்டுக்கல் - மயிலாடுதுறை இணைப்பு ரயில்(எண் 56822) 115 நிமிடங்கள் தாமதமாக திருச்சி சென்று சேரும். திண்டுக்கல் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் அக்.13 ஆம் தேதி(சனிக்கிழமை) மட்டும் திருவனந்தபுரம்-மதுரை அமிர்தா விரைவு ரயில்(எண்.16343) 80 நிமிடங்கள் காலதாமதமாக மதுரைக்கும், கோவை - நாகர்கோவில் ரயில்(எண்.56320) 45 நிமிடங்கள் காலதாமதமாகவும் நாகர்கோவிலுக்கும், திருநெல்வேலி- ஈரோடு பயணிகள் ரயில்(எண் 56826) 130 நிமிடங்கள் காலதாமதமாக ஈரோட்டுக்கும், திண்டுக்கல்-மயிலாடுதுறை இணைப்பு ரயில்(எண் 56822) 115 நிமிடங்கள் தாமதமாக திருச்சிக்கும் சென்று சேரும் என்று அறிவிக்கப்படுகிறது.