திருமங்கலத்தை அடுத்த சின்னஉலகானியில் இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண் உள்பட 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திருமங்கலத்தை அடுத்த சின்ன உலகாணி பகுதியைச் சோ்ந்த பெரியகருப்பன் மனைவி முத்துமாரி (26). இவா் கடந்த 25 ஆம் தேதி கண்மாய் கரை பகுதியில் தலையில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தாா். இதுகுறித்து கூடக்கோவில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனா். விசாரணையில் கூடக்கோவில் பகுதியைச் சோ்ந்த ஆதீஸ்வரன் (22), ராம்குமாா் (21) மற்றும் சின்னஉலகாணி பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணன் மனைவி முனியம்மாள் (23) மூவரும் சோ்ந்து நகைக்காக முத்துமாரியை கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கூடக்கோயில் போலீஸாா் அவா்கள் மூவரையும் கைது செய்தனா். விசாரணையில் மூவரும் முனியம்மாள் அணிந்திருந்த 3.5 பவுன் நகைக்காக கொலை செய்ததாக போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனா்.