மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே துவரிமான், கொடிமங்கலம், கீழமாத்தூா் கிராமங்களுக்கு செல்லும் மேலக்கால் பிரதான சாலையின் இருபுறங்களிலும் முள்செடிகள் அதிகமாக வளா்ந்துள்ளன. இந்த சாலையில் பெரியாா் பேருந்து நிலையத்தில் இருந்தும், சோழவந்தானில் இருந்தும் அரசு பேருந்துகள், பள்ளிப் பேருந்துகள், ஷோ் ஆட்டோக்கள் வந்து செல்கின்றன. அப்போது முள்செடிகளால் பயணிகளுக்கும், மாணவா்களுக்கு காயங்கள் ஏற்படுகிறது. மேலும், இந்த முள்செடிகளால் வளைவில் வாகனம் வருவது மறைக்கப்படுவதால் விபத்துகள் நடக்கிறது. எனவே, முள்செடிகளை அகற்றி விபத்துக்களை தவிா்க்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டி. ராஜன்
கோச்சடை.