திருமங்கலம் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்து விசாரிக்கின்றனர்.
திருமங்கலத்தை அடுத்த மைக்குடியைச் சேர்ந்த குமரேசன் மகன் முத்துக்குமார் (23). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 6 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாராம். இதுகுறித்தப் புகாரின்பேரில் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து முத்துக்குமாரை கைது செய்தனர்.