மதுரை அருகே சாலையின் குறுக்கே நாய் சென்றதால் இரு சக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்தவர் வெள்ளிக்கிழமை இறந்தார்.
மதுரை எச்எம்எஸ் காலனியைச் சேர்ந்தவர் ஜெய்லானி பாட்ஷா(50). இவர் தனது இரு சக்கர வாகனத்தில் நான்கு வழிச்சாலையில் வியாழக்கிழமை இரவு சென்றார். புதுக்குளம் அருகே சென்றபோது, சாலையின் குறுக்கே நாய் சென்றதால் கட்டுப்பாட்டை இழந்து வாகனத்தில் இருந்து ஜெய்லானி பாட்ஷா தவறி விழுந்தார். இதில், பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு சிகிச்சைப்பலனின்றி அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக அவரது மனைவு ரமிலாபானு அளித்தப் புகாரின்பேரில் நாகமலை புதுக்கோட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.