திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு மதுரை திருநகரில் திருவள்ளுவர் சிலைக்கு புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
எஸ்ஆர்வி மக்கள் நல மன்றம் சார்பில் திருநகர் 2 ஆவது பேருந்து நிறுத்தத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மன்றத் தலைவர் ஜி.அய்யல்ராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மன்ற பொருளாளர் எஸ்.அண்ணாமலை, துணைத்தலைவர் காளிதாஸ், எம்.கணேசன், ஹார்விபட்டி அரவிந்தன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.