மேலூர் அருகே உள்ள வெள்ளலூர் மந்தைக் கருப்பணசுவாமிகோயில் திருவிழாவையொட்டி மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 500-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
நீண்ட கால இடைவேளைக்குப் பின் இக்கோயில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரை, சிவகங்கை மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஜல்லிக்கட்டு காளைகள் கொண்டுவரப்பட்டிருந்தன. இந்த மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியைக் காண ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர்.
காளைகளைப் பிடிக்க முயன்றதில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களுக்கு வெள்ளலூரிலுள்ள மேம்படுத்தப்பட்ட மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. கீழவளவு போலீஸார் பாதுப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.