அழகர்கோவில் அருகேயுள்ள வலையபட்டியில் செல்வவிநாயகர், பெரியநாயகி அம்மன்கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
வலையபட்டியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள செவ்வவிநாயகர், பெரியநாயகி அம்மன்கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜைகள் செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கின. வியாழக்கிழமை காலை கோயில் கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.