மதுரையில் ஆரப்பாளையம், கோவில் பகுதிகளில் புதன்கிழமை மின்விநியோகம் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை கோவில் மற்றும் ஆரப்பாளையம் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளபட இருப்பதால், கீழஆவணி மூலவீதி, தளவாய் வீதி, எழுகடல் அக்ரஹாரம், தெற்காவணி மூலவீதி, கீழமாசி வீதி, வெங்கலக்கடைத்தெரு, நேதாஜி தெரு, தெற்குச்சித்திரை வீதி, கீழச்சித்திரை வீதி, வடக்குச்சித்திரை வீதி, சுங்கம் பள்ளிவாசல் தெரு, யானைக்கல் பகுதி திருமலைராயர் படித்துறை, வடக்கு வெளி வீதி தெற்கு பகுதி, புட்டுத்தோப்பு சாலை, சுடுதண்ணீர் வாய்க்கால் சாலை, ஆரப்பாளையம் கிராஸ், பேருந்து நிலையம், பொன்னகரம், அழகரடி, மோதிலால் பிரதான சாலை மற்றும் 1, 2 தெருக்கள், ராஜேந்திரா பிரதான சாலை, மேலப்பொன்னகரம் பிரதான சாலை, பொன்னகரம் ஒர்க்ஷப் சாலை, கனகவேல் காலனி, ஆறுமுச்சந்தி, ஆட்டுமந்தை, சிம்மக்கல், வடக்கு வெளிவீதி, ராஜா மில்சாலை, ஸ்காட் சாலை, மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி, காலேஜ்ஹவுஸ், எல்ஐசி சாலை, நேதாஜி தெரு, பாலம் ஸ்டேசன் சாலை, அய்யனார் கோவில் பகுதிகள், தாகூர்நகர், அகிம்சாபுரம், முத்துராமலிங்கபுரம், இருதயராஜ் புரம் ஆகிய பகுதிகளில் புதன்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று செயற்பொறியாளர் என்.மோகன் தெரிவித்துள்ளார்.