மதுரையில் ஆயுதங்களுடன் 7 பேர் கைது

மதுரையில் கொலை, கொள்ளையில் ஈடுபட இருந்த 7 பேரை ஆயுதங்களுடன் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

மதுரையில் கொலை, கொள்ளையில் ஈடுபட இருந்த 7 பேரை ஆயுதங்களுடன் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
மதுரை புறவழிச் சாலை, பொன்மேனி பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை ரோந்து பணியில் எஸ்.எஸ் காலனி குற்றப்பிரிவு காவல்துறையினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது பொன்மேனி சந்திப்பில் சந்தேகம் ஏற்படுத்தும் வகையில் சிலர் கார் ஒன்றைச் சுற்றி நின்று கொண்டிருந்தனர். அவர்கள், போலீஸாரை கண்டதும் அப்பகுதியை விட்டு வெளியேற முயன்றனர். இதில் சந்தேகமடைந்த போலீஸார் அவர்களை மடக்கி பிடித்தனர்.
தொடர்ந்து, காரை சோதனைச் செய்த போது, காரில் கத்தி, அரிவாள், உருட்டு கட்டை, மிளகாய் பொடி, ரூ.41 ஆயிரம் மற்றும் 7 செல்லிடப்பேசிகள் இருந்தன. 
இதைத் தொடர்ந்து, பிடிப் பட்ட 7 பேரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். இதில், மதுரை சொக்கலிங்கம் நகர் மகேந்திரன்(40), ஆரப்பாளையம் உதயகுமார்(30), காளவாசல் பாண்டி(21), முரட்டன்பத்திரி ஆனந்தராஜ்(21), சம்மட்டிபுரம் அருண்குமார்(21), முத்துப்பாண்டி(22), கருமாத்தூர் அஜீத்குமார்(21) என்பதும், இவர்கள் வழிப்பறியில் ஈடுபடுவது எனவும், பணம், நகைகளை தர மறுப்பவர்களை கொலை செய்வது எனவும் திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, எஸ்.எஸ். காலனி போலீஸார் 7 பேரையும் கைது செய்து, அவர்கள் வைத்திருந்த ஆயுதங்கள், ரொக்கம், செல்லிடப்பேசிகள் மற்றும் கார் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com