குடும்பப் பிரச்னை காரணமாக, உசிலம்பட்டி அருகே கல்லூரி மாணவர் சனிக்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
உசிலம்பட்டி அருகே வி.பெருமாள்பட்டியைச் சேர்ந்த முருகன் மகன் அருண்குமார் (20). இவர், உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் பி.எஸ்சி. கணிதம் 3 ஆம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில், குடும்பப் பிரச்னை காரணமாக அருண்குமார் கடந்த ஒரு வாரமாக வீட்டில் யாருடனும் பேசவில்லையாம். சனிக்கிழமை காலை முதல் வீட்டுக்கே வரவில்லை என்பதால், அவரைத் தேடியுள்ளனர்.
அப்போது, தோட்டத்தில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். உடனே, அவரை உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அங்கு மாணவரை பரிசோதித்த மருத்துவர், அருண்குமார் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தார்.
இது குறித்து உசிலம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.