ஆட்டோவில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

மதுரையில் ஆட்டோவில் ரேஷன் அரிசியைக் கடத்தியவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

மதுரையில் ஆட்டோவில் ரேஷன் அரிசியைக் கடத்தியவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
மதுரை அனுப்பானடி பகுதியில் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்குரிய வகையில் நிற்காமல் சென்ற ஆட்டோவை விரட்டிச் சென்று சோதனையிட்டனர். அதில் ரேஷன் அரிசியை கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து ரேஷன் அரிசியை கடத்திய புளியங்குளத்தை சேர்ந்த சுல்தான் என்பவரைப் போலீஸார் கைது செய்தனர். 
அவர் கடத்தி வந்த ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி மற்றும் ஆட்டோவைப் பறிமுதல் செய்து குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்தனர். அரிசி எங்கிருந்து  கடத்தி வரப்பட்டது, எங்கு கொண்டு செல்லப்படுகிறது என ஆட்டோ ஓட்டுநர் சுல்தானிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com