மதுரை
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்:டி.டி.வி.தினகரன் இன்றும் நாளையும் பிரசாரம்
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலையொட்டி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலர் டி.டி.வி.தினகரன்
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலையொட்டி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலர் டி.டி.வி.தினகரன் புதன், வியாழன் (மே 1, 2) ஆகிய இரு நாள்களும் பிரசாரம் செய்கிறார்.
திருப்பரங்குன்றம் அமமுக வேட்பாளர் இ.மகேந்திரனை ஆதரித்து ஐராவதநல்லூரில் புதன்கிழமை மாலை 4 மணிக்கு பிரசாரத்தைத் தொடங்கும் அவர், விரகனூர், சிலைமான், புளியங்குளம், கல்லம்பல், பனையூர், சாமநத்தம், விராதனூர், சோளங்குருணி, எலியார்பத்தி, பெரியஆலங்குளம் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறார். இரண்டாவது நாளான வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு பசுமலையில் பிரசாரத்தைத் தொடங்குகிறார். திருப்பரங்குன்றம் பேருந்து நிலையம், நிலையூர் கைத்தறி நகர், ஹார்விப்பட்டி, திருநகர், தனக்கன்குளம், கூத்தியார் குண்டு விலக்கு, கீழக்குயில்குடி விலக்கு, பல்கலை நகர் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்கிறார்.