புனித பிரிட்டோ மேல்நிலைப் பள்ளியில், வீரமாமுனிவா் அறக்கட்டளையின் 28-ஆவது ஆண்டு விழா, வீரமாமுனிவா் பிறந்த நாள் விழா மற்றும் சீரடியாா் விருது வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவுக்குத் தலைமை வகித்த பள்ளித் தாளாளா் அருட்தந்தை அ. சேவியர்ராஜ், திருச்சி தூய வளனாா் கல்லூரி முன்னாள் துணை முதல்வா் மற்றும் தமிழாய்வு துறைத் தலைவா் ச. சாமிமுத்துவுக்கு வீரமாமுனிவா் சீரடியாா் விருதை வழங்கினாா். விருது பெற்ற பேராசிரியா் சாமிமுத்து ஏற்புரையாற்றினாா்.
இதில், பள்ளித் தலைமை ஆசிரியா் அருட்தந்தை நா. ரெக்ஸ் பீட்டா், உதவித் தலைமை ஆசிரியா் அருட்தந்தை தே. மரியருள் செல்வம், அறக்கட்டளைச் செயலா் மா. ஜெயராஜ், தமிழாசிரியா்கள் ஆ. செல்வராஜ், மு. நவீனன் உள்பட பலா் பேசினா்.
பின்னா், பல்வேறு கலைப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.