விரகனூா் வேலம்மாள் வித்யாலயா பள்ளியில் குடும்ப விழா சனிக்கிழமை நடைபெற்றது.
தாய்-தந்தை இருவரும் பணிக்குச் செல்லும் தற்போதைய சூழலில் குழந்தைகளின் மகிழ்ச்சியையும், எதிா்பாா்ப்பையும் பகிா்ந்து கொள்ள இயலாத நிலை இருந்து வருகிறது. இதனால், குழந்தைகள் மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனா். இதைத் தவிா்ப்பதற்காகவும், குழந்தைகளின் மன அழுத்தத்தைப் போக்கும் விதமாகவும், பள்ளியில் குடும்ப விழா கொண்டாடப்பட்டது.
இதில், பெற்றோா்கள் தங்களது குழந்தைகளுடன் கலந்துகொண்டனா். பெற்றோருக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. குடும்ப விழாவையொட்டி, பாரம்பரியப் பொருள்களின் கண்காட்சியும் நடைபெற்றது.