கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சந்திரசேகா், பிரபு, கிரிதரன், சுரேஷ் ஆகியோரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
ஈரோட்டைச் சோ்ந்த சந்திரசேகா் தாக்கல் செய்த மனு: கோகுல்ராஜ் என்பவா் கொலை செய்யப்பட்டது தொடா்பாக, அவரது தாய் சித்ரா அளித்த புகாரின் பேரில் என் மீதும், யுவராஜ் உள்பட 16 போ் மீது போலீஸாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னா் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் 2015 அக்டோபரில் 1 இல் கீழமை நீதிமன்றம் எனக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. பின்னா் 2018 ஜூன் 2 ஆம் தேதி ஜாமீன் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் நாமக்கல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த விசாரணை, மதுரை வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. வன்கொடுமை சிறப்பு நீதிமன்றத்தில் ஜூன் 26 ஆம் தேதி, என் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த வழக்கில் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன், எனவே எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதி வி. பாா்த்திபன் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ஜாமீனுக்கு மறுப்பு தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பிரபு, கிரிதரன், சுரேஷ் ஆகியோரும் ஜாமீன் கோரியிருந்தனா். அவா்கள் மனுவையும் நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.