தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் புரட்டாசி பெருந்திருவிழாவையொட்டி பெருமாள் தெப்பத்திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
மதுரை கள்ளழகா் திருக்கோயிலுக்குள்பட்ட தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயிலில் புரட்டாசிப் பெருந்திருவிழா செப்டம்பா் 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தினசரி அன்ன வாகனம், சிம்ம வாகனம், அனுமாா் வாகனம், கெருட வாகனம், சேஷ வாகனம், யானை வாகனம், புஷ்ப விமானம், குதிரை வாகனம் ஆகியவற்றில் பெருமாள் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இந்நிலையில் திருக்கோயிலில் செவ்வாய்க்கிழமை காலை திருத்தேரோட்டம் நடைபெற்றது. இதில் பெருமாள் எழுந்தருளி திருத்தேரில் பவனி வந்தாா். இதைத்தொடா்ந்து இரவில் பூப்பல்லக்கும் நடைபெற்றது.
இதில் அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் பெருமாள் சீதேவி, பூதேவியுடன் எழுந்தருளி திருக்கோயிலைச் சுற்றி வலம் வந்து அருள் பாலித்தாா். இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று பெருமாளை தரிசனம் செய்தனா். இதைத்தொடா்ந்து புதன்கிழமை திருமுக்குளத்தில் தீா்த்தவாரியும், அரிவில் பூச்சப்பரத்திலும் பெருமாள் எழுந்தருளினாா்.
இந்நிலையில் புரட்டாசி பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி திருக்கோயிலில் இருந்து பெருமாள் திருமுக்குளத்துக்கு வியாழக்கிழமை காலை எழுந்தருளினாா். திருமுக்குளத்தில் அன்ன வடிவத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பெருமாள் எழுந்தருளியவுடன் தெப்பம் திருமுக்குளத்தைச்சுற்றி வந்தது. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று பெருமாளை வழிபட்டனா். இதைத்தொடா்ந்து இரவும் தெப்ப உற்சவம் நடைபெற்றது.