வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் உதவி மையம் திறப்பு

மதுரையில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மண்டல அலுவலகத்தில் தொழிலாளர்கள் வசதிக்காக உதவி மையம் புதன்கிழமை திறக்கப்பட்டது.

மதுரையில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மண்டல அலுவலகத்தில் தொழிலாளர்கள் வசதிக்காக உதவி மையம் புதன்கிழமை திறக்கப்பட்டது.
மதுரை நரிமேடு பகுதியில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மண்டல அலுவலகம் இயங்கி வருகிறது.இந்நிலையில் மண்டல அலுவலகத்துக்கு வரும் தொழிலாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் உதவிக்காக பிரத்யேக உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது. 
இதன்மூலம் தொழிலாளர் சேம நல நிதியை செலுத்தும் மனுக்கள் பூர்த்தி செய்வது மற்றும் ஆன்லைன் மூலம் செலுத்துவது ஆகியவற்றை ஊழியர்கள் உதவியுடன் மேற்கொள்ளலாம். மேலும் உதவி மையத்தின் மூலம்  வருங்கால வைப்பு நிதி திட்டங்களையும்அறிந்து கொள்ளலாம் என்று மண்டல ஆணையர் என்.கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com