மதுரையில் சாலையில் நடந்து சென்றவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், அவர் சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
மதுரை மாவட்டம் வளையன்குளத்தைச் சேர்ந்தவர் ஐயப்பன் (42). இவர், கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி கே.கே. நகரில் சுந்தரம் பூங்கா பகுதியில் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, ஐயப்பன் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டதாம். இதில் பலத்த காயமடைந்த ஐயப்பனை, அப்பகுதியினர் மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி அவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி அளித்த புகாரின்பேரில், கே.கே. நகர் போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.