மதுரை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 16) காலை 11.30 மணிக்கு நடைபெறும்.
மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் இக் கூட்டத்தில் வேளாண்மை தொடர்புடைய அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்பர். ஆகவே, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் இக் கூட்டத்தில் பங்கேற்று, விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மனுக்களாக ஆட்சியரிடம் வழங்கலாம்.