செக்கானூரணி அரசு ஐடிஐயில் மாணவர் சேர்க்கை

மதுரை மாவட்டம் செக்கானூரணி அரசு ஐடிஐ-யில் சேர விரும்பும் மாணவ, மாணவியர் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் செக்கானூரணி அரசு ஐடிஐ-யில் சேர விரும்பும் மாணவ, மாணவியர் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் செக்கானூரணியில் உள்ள அரசு ஐடிஐ-யில் படிக்க விரும்பும் மாணவ, மாணவியர் ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்குள் w‌w‌w.‌s‌k‌i‌l‌l‌t‌r​a‌i‌n‌i‌n‌g.‌t‌n.‌g‌o‌v.‌i‌n  என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம். ஐடிஐயில் சேருவதற்கு 14 வயது முதல் 40 வயது வரை உள்ளஆண்கள் விண்ணப்பிக்கலாம். பெண்களுக்கு வயது உச்சவரம்பு இல்லை. எனவே  14 வயது பூர்த்தியடைந்த பெண்கள் விண்ணப்பிக்கலாம். மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை நிர்ணயிக்கப்பட்டு கலந்தாய்வு நடத்தப்படும். கலந்தாய்வு நடைபெறும் இடம், நாள் உள்ளிட்ட விவரங்கள் மனுதாரர் விண்ணப்பத்தில் தெரிவித்துள்ள செல்லிடப்பேசி எண்ணுக்கு குறுந்தகவல் மூலம் தெரிவிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு செக்கானூரணி அரசு ஐடிஐ தொலைபேசி எண் 04549-287224 தொடர்புகொள்ளலாம் என்று ஐடிஐ முதல்வர் ல.தர்மராஜ் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com