சுதந்திர தின விழாவினை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வியாழக்கிழமை பொதுவிருந்து நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுதந்திர தினத்தை யொட்டி உச்சிகால வேளையில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
தொடர்ந்து பொது விருந்து நடைபெற்றது. இதில் திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை உறுப்பினர் மருத்துவர் சரவணன், வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், வட்டாட்சியர் நாகராஜன், திருப்பரங்குன்றம் கோயில் கண்காணிப்பாளர் கோகுலகண்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.