உலகத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ்க் கூடல் நிகழ்ச்சி

உலகத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற தமிழ்க் கூடல் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

உலகத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற தமிழ்க் கூடல் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
உலகத் தமிழ்ச் சங்கத்தில் ஒவ்வொரு மாதமும் தமிழ்க்கூடல் நிகழ்வு நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி, வியாழக்கிழமை நடைபெற்ற தமிழ்க் கூடல் நிகழ்வை தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் கோ.விசயராகவன் தொடக்கி வைத்தார்.
இதில், மொழியியல் ஓர் அறிமுகம் என்ற தலைப்பில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இந்திய மொழிகள் துறை புல முதன்மையர்  வி.திருவள்ளுவன் பேசினார்.  அதைத்தொடர்ந்து  எங்கெங்கு காணினும் கவிதையடா என்ற தலைப்பில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின்  தமிழியல் துறைப் பேராசிரியர் அரங்க.பாரி பேசினார்.  உலகத் தமிழ்ச் சங்க இயக்குநர் (பொறுப்பு) ப.அன்புச்செழியன், ஆய்வறிஞர் சு.சோமசுந்தரி மற்றும் தமிழறிஞர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com