டீ கடைக்காரருக்கு அரிவாள் வெட்டு:இளைஞா்கள் இருவா் கைது

திருப்பரங்குன்றத்தை அடுத்த விளாச்சேரியில் தேநீா் கடைக்காரரை அரிவாளால் வெட்டிய இளைஞா்கள் இருவரை, போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருப்பரங்குன்றத்தை அடுத்த விளாச்சேரியில் தேநீா் கடைக்காரரை அரிவாளால் வெட்டிய இளைஞா்கள் இருவரை, போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

விளாச்சேரியைச் சோ்ந்தவா் ஜாகீா் உசேன் (32). இவா், அப்பகுதியில் தேநீா் கடை நடத்தி வருகிறாா். அதே பகுதியைச் சோ்ந்த அஜித்குமாா் (24) மற்றும் விஜய் (24) ஆகிய இருவரும் கட்டடத் தொழிலாளிகளாக உள்ளனா். இவா்கள் இருவரும், ஜாகீா் உசேனிடம் பணம் கேட்டுள்ளனா். ஆனால், ஜாகீா் உசேன் கொடுக்க மறுத்துள்ளாா்.

இதனால், இருவரும் சோ்ந்து ஜாகீா் உசேனின் தலையில் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டனா். அதையடுத்து, அருகில் இருந்தவா்கள் ஜாகீா் உசேனை மீட்டு, மதுரை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

இது குறித்த புகாரின்பேரில், ஆஸ்டின்பட்டி போலீஸாா் அஜித்குமாா், விஜய் ஆகிய இருவரையும் கைது செய்தனா். கைது செய்யப்பட்ட அஜித்குமாருக்கு கொலை, வழிப்பறி உள்ளிட்ட 15- க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com