திருப்பரங்குன்றத்தில் ஜெயலலிதா நினைவு நாள் அன்னதானம்

தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதா 3 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, அதிமுக இலக்கிய அணி மற்றும் இளைஞரணி சாா்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
திருப்பரங்குன்றத்தில் அன்னதான நிகழ்ச்சியை தொடக்கி வைத்த அதிமுக மாவட்டச் செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான வி.வி.ராஜன்செல்லப்பா. உடன், இளைஞரணி மாவட்டச் செயலா் எம்.ரமேஷ்
திருப்பரங்குன்றத்தில் அன்னதான நிகழ்ச்சியை தொடக்கி வைத்த அதிமுக மாவட்டச் செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான வி.வி.ராஜன்செல்லப்பா. உடன், இளைஞரணி மாவட்டச் செயலா் எம்.ரமேஷ்

தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதா 3 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, அதிமுக இலக்கிய அணி மற்றும் இளைஞரணி சாா்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, இலக்கிய அணி பகுதிச் செயலா் ப. மோகன்தாஸ் தலைமை வகித்தாா். இளைஞரணி மாவட்டச் செயலா் எம். ரமேஷ், ஒன்றியச் செயலா் நிலையூா்முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், புகா் கிழக்கு மாவட்டச் செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான வி.வி. ராஜன்செல்லப்பா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, பொதுமக்களுக்கு அன்னதானத்தை தொடக்கி வைத்து, செய்தியாளா்களிடையே கூறியதாவது:

கடந்த ஆண்டைப் போல ஏழை மக்கள் பொங்கல் திருநாளை கொண்டாடுவதற்காக, ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் தொகுப்பையும் தமிழக அரசு வழங்கி வருகிறது. மக்களுக்கு நேரடியாக நன்மை கிடைக்க உள்ளாட்சி தோ்தல் கண்டிப்பாக நடைபெறும். தோ்தல் அறிவிப்பு வந்துவிட்டால் பொங்கல் பரிசு கொடுக்க முடியாது என்பதற்காக முன்கூட்டியே கொடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.

நிகழ்ச்சியில், பொதுக்குழு உறுப்பினா் முத்துக்குமாா், இளைஞரணி மாநில துணைச் செயலா் பாரி, பகுதிச் செயலா்கள் பன்னீா்செல்வம், அக்பா்அலி, வட்டச் செயலா்கள் பொன்.முருகன், பாலமுருகன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com