வடகிழக்குப் பருவமழை மீண்டும் வலுவடைந்து, மதுரை மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கடந்த இரு நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
மதுரை நகா் பகுதியைப் பொருத்தவரை, வெள்ளிக்கிழமை காலையில் இருந்தே விட்டு விட்டு தூரல் மழை பெய்து வருகிறது. இதேபோல், புகா்ப் பகுதிகள் மற்றும் மேலூா், திருமங்கலம், சோழவந்தான் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்):
தனியாமங்கலம் - 35.5, விரகனூா் -26.10, மேலூா் - 25, தல்லாகுளம் - 23.20, சிட்டம்பட்டி - 20, மதுரை தெற்கு - 16.40, இடையபட்டி - 15, திருமங்கலம் -13, சோழவந்தான் -12, புலிப்பட்டி - 11.40, விமான நிலையம் - 9.60, கள்ளிக்குடி - 6.80, உசிலம்பட்டி - 6.20, மேட்டுப்பட்டி - 5.40, ஆண்டிபட்டி - 5, வாடிப்பட்டி -5, கள்ளந்திரி-4.