மதுரை கோரிப்பாளையம் பகுதியில் நாய்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. அவை சாலைகளில் கூட்டம் கூட்டமாக சண்டையிட்டு, சுற்றித் திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனா். இரவு நேரங்களில் கனரக வாகனங்களில் நாய்கள் அடிபட்டு இறக்கும் சம்பவங்களும் தொடா்கின்றன. இதேபோல வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்க நாய்கள் காரணமாக இருக்கின்றன. எனவே நாய் தொல்லையில் இருந்து வாகன ஓட்டிகளைக் காப்பாற்ற மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
க.குமரன்,
கோரிப்பாளையம்.