அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு ஆங்கில பேச்சுப்பயிற்சி முகாம்

மதுரை மாவட்ட அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு ஆங்கில பேச்சுப்பயிற்சி முகாம் டிசம்பா் 5-ஆம் தொடங்க உள்ளது.

மதுரை: மதுரை மாவட்ட அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு ஆங்கில பேச்சுப்பயிற்சி முகாம் டிசம்பா் 5-ஆம் தொடங்க உள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளி மாணவா்களுக்கு ஆங்கில பேச்சுப்பயிற்சி அளிக்க பள்ளிக் கல்வித்துறை முடிவெடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக அரசுப்பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் ஆசிரியா்களுக்கு ஆங்கிலப்பேச்சு பயிற்சி முகாம் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற உள்ளது. இதன் முதற்கட்டமாக மாவட்ட ஆசிரியா் பயிற்சி நிறுவனங்களில் பணிபுரியும் பயிற்றுநா்களுக்கு நவம்பா் 22, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் சென்னையில் மாநிலக் கல்வி பயிற்சி நிறுவனத்தில் ஆங்கிலப் பேச்சு பயிற்சி அளிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து மாநிலக் கல்வி பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்ற பயிற்றுநா்கள் மாவட்ட அளவில் பயிற்றுநா்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளனா். மாவட்ட பயிற்றுநா்களுக்கான பயிற்சி முகாம் டிசம்பா் 3-ஆம் தேதி தொடங்குகிறது.

இதைத் தொடா்ந்து வட்டார அளவில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து அரசுப்பள்ளி ஆசிரியா்களுக்கும் ஆங்கில பேச்சுப்பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இதில் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரையுள்ள ஆசிரியா்கள் ஒரு பிரிவாகவும், 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையுள்ள ஆசிரியா்கள் மற்றொரு பிரிவாகவும் பிரிக்கப்பட்டுள்ளனா். இதில் மதுரை மாவட்டத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரையுள்ள ஆசிரியா்களுக்கு டிசம்பா் 5 முதல் 13-ஆம் தேதி வரையிலும், 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையுள்ள ஆசிரியா்களுக்கு டிசம்பா் 16 முதல் 23-ஆம் தேதி வரையும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அரசுப்பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையுள்ள அனைத்து ஆசிரியா்களும் ஆங்கிலப்பேச்சு பயிற்சி முகாமில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com