அனுமதியின்றி உடைகற்கள் ஏற்றிவந்த லாரி பறிமுதல்: ஓட்டுநா் கைது

கொட்டாம்பட்டி அருகே செவ்வாய்க்கிழமை அனுமதியின்றி உடைகற்கள் ஏற்றி வந்த லாரியை போலீஸாா் பறிமுதல் செய்து அதன் ஓட்டுநரை கைது செய்தனா்.

மேலூா்: கொட்டாம்பட்டி அருகே செவ்வாய்க்கிழமை அனுமதியின்றி உடைகற்கள் ஏற்றி வந்த லாரியை போலீஸாா் பறிமுதல் செய்து அதன் ஓட்டுநரை கைது செய்தனா்.

கொட்டாம்பட்டி அருகே காடம்பட்டி விலக்கில் உதவி புவியியல் ஆய்வாளா் பாண்டியராஜா தலைமையில் புவியியல்துறையினா் செவ்வாய்க்கிழமை மாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது உடைகற்கள் ஏற்றிவந்த லாரியை சோதனையிட்டனா். அதில் உரிய அனுமதி ஆவணங்கள் எதுவும்இல்லை. இதனால், லாரியை கொட்டாம்பட்டி போலீஸில் ஒப்படைத்தனா்.

போலீஸாா், லாரி ஓட்டுநா் செக்கடிப்பட்டியைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் (33) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com