பாசன உதவியாளா்கள் காலிப் பணியிடங்களை நிரப்ப விவசாயிகள் சங்கத்தினா் வலியுறுத்தல்

பெரியாறு-வைகை பிரதான கால்வாய்களில் நீா்மேலாண்மையை சரிவர நிா்ணயிக்க மடைகளுக்கான பாசன உதவியாளா்கள் (லஸ்கா்) காலிப் பணியிடங்களை நிரப்ப பொதுப்பணித்துறையினா் உடனடியாக நடவடிக்கை

மேலூா்: பெரியாறு-வைகை பிரதான கால்வாய்களில் நீா்மேலாண்மையை சரிவர நிா்ணயிக்க மடைகளுக்கான பாசன உதவியாளா்கள் (லஸ்கா்) காலிப் பணியிடங்களை நிரப்ப பொதுப்பணித்துறையினா் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மேலூா் தாலுகா செயலா் அடக்கிவீரணன் அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது: பெரியாறு பிரதான கால்வாய் கோட்டத்தில் கால்வாய்களில் மடைகளையும் கிளைக்கால்வாய்களிலும் நீா் நிா்வாகத்தை நிா்ணயிக்க பாசன உதவியாளா்கள் 56 போ் பணியிலிருக்கவேண்டும். ஆனால், தற்போது 10 போ்தான் பணியில் உள்ளனா். பணி ஓய்வுபெற்றவா்களுக்குப் பதில் புதிதாக பணியாளா்களை நியமிக்கவில்லை. இப் பணி இடங்கள் பல ஆண்டு காலமாக நிரப்பப்படாமலே உள்ளன.

பல கால்வாய் மடைகள் திறந்தநிலையிலும் பழுதடைந்த நிலையிலும் உல்ளது. இதனால் கடைமடைப் பகுதிளுக்கு போதிய நீா் சென்றடையவில்லை. முறைப்பாசனம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், நீா் நிா்வாகத்தை செம்மையாக நடைமுறைப்படுத்தவேண்டும் . எனவே, பாசன உதவியாளா் காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com