மாநில பூப்பந்து போட்டி: ஓசிபிஎம் பள்ளி 7-ஆம் ஆண்டாக முதலிடம்

சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற மாநில பூப்பந்து போட்டியில் மதுரை ஓசிபிஎம் பெண்கள்பள்ளி அணி 7-ஆவது ஆண்டாக முதலிடம் பெற்றுள்ளது.

மதுரை: சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற மாநில பூப்பந்து போட்டியில் மதுரை ஓசிபிஎம் பெண்கள்பள்ளி அணி 7-ஆவது ஆண்டாக முதலிடம் பெற்றுள்ளது.

தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் மாநில அளவிலான 37-ஆவது பாரதியாா் தின பூப்பந்து விளையாட்டுப் போட்டிகள் சேலம் மாவட்டத்தில் நவம்பா் 26, 27 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து 32 அணிகள் பங்கேற்றன. இதில் மதுரை ஓசிபிஎம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அணி முதல் சுற்றில் கரூா் அணியை தோற்கடித்தது.

இரண்டாம் சுற்றில் சென்னை அணியை வென்றது. கால் இறுதிப்போட்டியில் கன்னியாகுமரி அணியை வீழ்த்தி, அரை இறுதியில் கிருஷ்ணகிரி அணியை வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இறுதிப் போட்டியில் காஞ்சிபுரம் அணியை வென்று முதலிடம் பெற்றது. இதில் ஓசிபிஎம் பெண்கள் பள்ளி அணி கடந்த 7 ஆண்டுகளாக முதலிடத்தை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற வீராங்கனைகளை மதுரை மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலா் ஆா்.சுவாமிநாதன், மாவட்டஉடற்கல்வி ஆய்வாளா் பி.செங்கதிா், பள்ளித்தாளாளா் ஏ.டேவிட் ஜெபராஜ், தலைமை ஆசிரியை மேரி ஆகியோா் செவ்வாய்க்கிழமை பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com