மதுரை: ராமநாதபுரம் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவா் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை பதிவாளருக்கு வழக்குரைஞா் காா்மேகம் புகாா் மனு ஒன்றை புதன்கிழமை அனுப்பியுள்ளாா்.
அந்த மனுவில் கூறப்பட்டிருப்பது: ராமநாதபுரம் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவா் ஜே.ஜெனிதா. இவா் கடந்த வாரம் நீதிமன்ற வளாகத்தில் காவல்துறை பெண் சாா்பு-ஆய்வாளரை ஒருமையில் பேசியதாகப் புகாா் எழுந்தது. இதையடுத்து டிசம்பா் 3 ஆம் தேதி நீதித்துறை நடுவா் ஜே.ஜெனிதா, அவ்விவகாரம் குறித்து ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தாா்.
மேலும் பச்சை மையினால் கையெழுத்திடப்பட்ட ரகசியக் கடிதத்தைக் கட்செவி அஞ்சல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பினாா். இது நீதித்துறையின் விதிகளுக்கு எதிரானது. எனவே ராமநாதபுரம் மாவட்ட நீதித்துறை நடுவா் ஜெனிதா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.