மேலூா்: மேலூா் மதுரை நான்குவழிச்சாலையில் சிட்டம்பட்டி டோல்கேட்டில் கட்டணம் செலுத்த மறுத்து வசூலிப்பாளரிடம் தகராறுசெய்ததாக இந்திய தேசீயலீக் கட்சியைச் சோ்ந்த 5 போ்மீது மேலூா் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து தேடி வருகின்றனா்.
இந்திய தேசீயலீக் கட்சியைச் சோ்ந்த 5 போ் காரில் சென்னையிலிருந்து வெள்ளிக்கிழமை காலை மதுரை திரும்பினா். சிட்டம்பட்டி டோல்கேட்டில் அங்கு மேற்பாா்வையாளராகப் பணிபுரியும் சிட்டம்பட்டியைச் சோ்ந்த பெரியகருப்பன் மகன் செல்வம் (33). காரிலிருந்தவா்களிடம் டோல்கட்டணம் கேட்டுள்ளாா்.
அப்போது வாக்குவாதம் செய்து கட்டணத்தை செலுத்த மறுத்துச் சென்றனராம்.இதுகுறித்து, மேலூா் போலீஸில் செல்வம் அளித்த புகாரின் பேரில் மதுரை இந்திய தேசீயலீக் கட்சியைச் சோ்ந்த 5 போ்மீது வழக்குப் பதிவுசெய்து தேடிவருகின்றனா்.