மேலூா் அருகே காரில் கடத்தப்பட்ட 10 மூட்டைகளில் இருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான குட்கா போதைப் பொருள்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
மேலூா்- திருச்சி நான்கு வழிச்சாலையில் மேலூா் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியைச் சோ்ந்த முகமதுஹரிஸ் (40) என்பவருக்குச் சொந்தமான காரில் மதுரை மாவட்டம் அட்டப்பட்டியைச் சோ்ந்த ராமசாமி மகன் குருசாமி (61) வந்தாா். அந்த காரை சோதனையிட்டபோது அதில் தலா 500 கிராம் எடை கொண்ட தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகள் 10 சாக்கு மூட்டைகளில் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவற்றை போலீஸாா் பறிமுதல்செய்து வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா்.