மதுரையில் அரசால் தடைசெய்யப்பட்ட ரூ.1 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை போலீஸார் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.
மதுரை விளக்குத்தூண் சுவாமி சன்னதி தெருவைச் சேர்ந்த சத்தியநாராயணன் மகன் நிதீஷ்குமார் (19). அதேபகுதியில் உள்ள இவரது கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனைக்கு பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
அதைத்தொடர்ந்து, விளக்குத்தூண் சார்பு ஆய்வாளர் ஸ்ரீதரன் தலைமையிலான போலீஸார், அந்த கடையில் சோதனை நடத்தினர். அதில், அங்கு 28 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸார் பறிமுதல் செய்து, நிதீஷ்குமாரை கைது செய்தனர்.