திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் உண்டியல் காணிக்கை வருவாய் ரூ.32 லட்சத்து 48 ஆயிரத்து 872 ஆக இருந்தது.
இக்கோயிலில் மாதம் ஒரு முறை உண்டியல் திறந்து எண்ணப்படுவது வழக்கம். இந்த மாதத்திற்கான உண்டியல் திறப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கோயில் துணை ஆணையர் (பொறுப்பு)மாரிமுத்து முன்னிலையில் ஸ்கந்த குரு வித்யாலயா மாணவர்கள், ஐயப்ப சேவா சங்கத்தினர், ஆண்டவர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மற்றும் கோயில் பணியாளர்கள் காணிக்கைகளை எண்ணும் பணியில் பங்கேற்றனர். இதில் ரொக்கம் ரூ. 32 லட்சத்து, 48 ஆயிரத்து 872, தங்கம் 210 கிராம், வெள்ளி 7 கிலோ 308 கிராம் இருந்தன.